தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு!

stalin
stalin

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளதுடன், மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பில் தி.மு.க   கேவியட் மனுத்தாக்கலை (முன்னெச்சரிக்கை மனு) செய்துள்ளது.

இதனை  எதிர்த்து மத்திய அரசு மேல் முறையீடு செய்தால் தங்களது கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.