ஐ.எஸ் அமைப்பின் தலைவர் மரணமடைந்து விட்டார்- ஐ.எஸ் அமைப்பு உறுதி

isis
isis

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் மரணமடைந்துள்ளதை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

புதிய தலைவராக அபு இப்றாஹீம் அல் ஹசீம் அல் குராசி என்பவரை தமது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபு பக்கர் அல் பக்தாதி கொலை செய்யப்பட்டதாக அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.