தேர்தலுக்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறுவிப்பு!

gr
gr

வெளிநாடு சென்ற இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதற்கமைய வெளிநாடு சென்ற இலங்கை வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது தேசிய அடையாள அட்டையுடன் கடவுசீட்டையும் கொண்டுவர வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒரு வாக்காளருக்கு கடவுசீட்டை சமர்ப்பிக்க முடியாவிட்டால், மற்றொரு செல்லுபடியாகும் அடையாள ஆவணம் ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்ற வாக்காளர்களின் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் 2018 ஆம் ஆண்டிற்கான தேர்தல் பதிவேட்டின் சாதாரண குடியிருப்பு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளதோடு, பிரசார நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.