முதல்நாள் தபால் மூல வாக்களிப்பு – கெபே முக்கிய அறிவிப்பு

cafe
cafe

ஜனாதிபதித் தேர்தலுக்கான முதல்நாள் தபால்மூல வாக்களிப்பின் போது எந்தவித பாரிய தேர்தல் சட்ட மீறல் சம்பவங்களும் பதிவாகவில்லையென கெபே அமைப்பு அறிவித்துள்ளது.

தமது அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் சேவையின் போது, சில வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு அருகாமையில் சட்ட விரோதமான போஸ்டர்கள் சில ஒட்டப்பட்டிருந்ததாகவும், சில இடங்களில் சட்டவிரோதமான முறையில் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததையும் அறியமுடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தவிர, வேறு பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் தபால் மூல வாக்களிப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.