நுடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பிற்கு பயன்படுத்தும் வகையில் புதிதாக 3 ஆயிரம் வாக்குப் பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த வாக்குப் பெட்டிகள் நீர் புகாத வண்ணம் பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்பொழுது கொள்வனவு செய்யப்பட்டுள்ள பெட்டிகளுக்கு 1500 ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், பிளாஸ்டிக் வாக்குப் பெட்டியொன்றை கொள்வனவு செய்வதாயின் ஒரு பெட்டிக்கு 8500 ரூபா செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கொள்வனவு செய்யப்பட்டுள்ள பெட்டிகள் யாழ்ப்பாணம், வன்னி, அம்பாறை, குருணாகலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, புத்தளம், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.