எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியிற்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர் எமக்கு ஆதரவு வழங்க இணைந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்றும் கலந்துரையாடியுள்ளதாகவும், அப்பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் மினுவாங்கொட பிரதேசத்தில் நேற்று (Oct.31) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இதனை தெரிவித்துள்ளார்.