வருட ஆரம்பத்தில் இருந்து உலகில் பலரை நாம் இழந்து வருகிறோம். கொரோனா என்ற கொடிய நோயின் தாக்கத்தால் இப்போது வரை பலர் இறந்தும், சிலர் போராடியும் வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தவர் வடிவேலு பாலாஜி. இவர் இறந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
நகைச்சுவைகள் மூலம் சிரிக்க வைத்த பாலாஜி இப்போது நம்முடன் இல்லை. அவர் இறந்து 4 மாதங்கள் ஆன நிலையில் வடிவேலு பாலாஜியின் குடும்பத்தை சந்தித்துள்ளார் புகழ்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பன் குடும்பத்தை இன்று சந்தித்தேன் என பதிவு செய்துள்ளார்.