பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(29), சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா.
இவருக்கென் தனி ரசிகர் வட்டம் உள்ளது. அவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின் திருமண திகதியை முடிவு செய்யவிருந்தார்.
இந்நிலையில், தனியார் நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த விபரீத முடிவு சின்னத்திரை நடிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள செய்தியில் சித்ராவுக்கும் அவரது வருங்கால கணவருக்கும் விடுதியில் ஏதோ நேற்று சண்டை வர நான் உடை மாற்ற வேண்டும் வெளியே செல்லுங்கள் என அவரை வெளியே அனுப்பிவிட்டு சித்ரா இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்கின்றனர்.