நடிகர் சரத்குமாருக்கு கொரோனாத் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவருடைய மனைவியும் நடிகையுமான ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஹைதராபாத்திலிருக்கும் சரத்குமாருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதாகவும் அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சரத்குமார் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என தான் நம்புவதாகவும் அவருடைய உடல்நலம் குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிவிக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராதிகாவின் இந்த டுவிட்டை அடுத்து சரத்குமார் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாக வேண்டும் என அவரது ரசிகர்களும் திரையுலகினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.