தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் கதாநாயகியாக அறிமுகமானாலும், தன்னுடைய பல்வேறு திறமைகளை வெளிக்கொணர்ந்து, முன்னணி நடிகையாக மாறியவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கால்பதித்தார்.
மேலும் கெத்தான கதாபாத்திரங்கள், தைரியமான காட்சிகள் என துணிச்சலான படங்களை தேர்வு செய்து நடிப்பதால், வரலட்சுமிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் வரலட்சுமி நடித்துள்ள ஒரு படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் அனைத்தையும் தானே நடித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது தற்போது வரலட்சுமி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘சேஸிங்’. இந்த திரைப்படம் விரைவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளதாம்.
இந்தப் படத்தில் வரலட்சுமி ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் சண்டைக்காட்சிகள் அனைத்தையும் நடிகை வரலட்சுமி நடித்துள்ளாராம். அதுவும் ஒரு சீனுக்கு கூட டூப்பே போடலயாம்.
தற்போது ஒன்பது படங்களை கைவசம் வைத்து கோலிவுட்டின் பிஸியான நடிகையான வரலட்சுமி இவ்வளவு ரிஸ்கான வேலையை பார்த்திருப்பது, மற்ற படத்தின் தயாரிப்பாளர்களை கதிகலங்க செய்துள்ளதாம்.