பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் காட்சி எத்தனை நாள் வரும் தெரியுமா?

chi34

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வந்தனர்.

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா.

நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என தொகுப்பாளினி, திறமைகளைக் கொண்டவர்.

இந்நிலையில் சித்ரா இறந்து விட்டதால்,இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதில் முல்லை கதாபத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்த நிலையில், கண்ணம்மா சீரியலில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

சித்ரா இறந்து கிட்டதட்ட 10 நாட்கள் ஆகி இருந்தாலும், அவர் உயிரோடு இருக்கும் போது எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை ஓட்டி வருகின்றனர்.

பாண்டியன் அடுத்த சித்ராவாக காவ்யா எப்போது என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவின் கணவர் அளித்த தகவலின்படி வரும் டிசம்பர் 23 ஆம் தேதி வரை தான் சித்ராவை பாண்டியன் ஸ்டோர்ஸில் காண முடியும் என்றும் அதையடுத்து காவ்யாவை புதிய முல்லையாக பார்க்கலாம் என்று தெரியவந்துள்ளது.