விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதன் காரணமாக ஜனவரி மாதம் 13ஆம் திகதி குறித்த திரைப் படத்தை திரையரங்குகளில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இச் சந்திப்பின்போது,திரையரங்குகளில் பார்வையாளர்கள் அனுமதியை 50% இருந்து 100%அதிகரிக்கும்படி கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.