சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் மற்றும் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.அதில் சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோ குறித்து தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில் உடல்நல கோளாறு காரணமாக தனது அரசியல் முடிவை மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவர் விரிவான விளக்கம் அளித்த நிலையிலும் அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென நேற்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல ஆண்டிற்குப் பிறகு நான் ஏ.விம்.எம் நிறுவனத்தின் ஸ்டியோவிற்கு சென்றேன்.
பழைய நினைவுகள் எனக்கு வந்தது. என் தந்தை மற்றும் எனது கணவர் இருவரின் நிறைய படங்கள் படப்பிடிப்பு நடந்தது. அது பழைய நினைவுகளில் சிறந்தது. விலைமதிப்பில்லாத நினைவுகளை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.