ஐந்து கோடி சம்பளம் கேட்கும் தனுஷ்; அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!

1616149673 5187
1616149673 5187

கர்ணன் படத்தின் மூலம் தயாரிப்பாளர் மிகப்பெரிய தொகையை லாபமாக எடுத்துள்ளதை அறிந்த தனுஷ் ஒரு கோரிக்கையை வைத்துள்ளாராம்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 9ஆம் திகதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பரப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சினிமா வியாபார வட்டாரத்தில் இந்த படத்தின் வியாபாரம் பற்றி ஆச்சர்யமான தகவல்களை பேசி வருகின்றனர். தாணு, தனுஷ் கூட்டணியில் உருவான அசுரன் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு உள்ள நிலையில் படத்தை தாணு வெளியாவதற்கு முன்னரே 25 கோடி ரூபாய் லாபம் வரும் அளவுக்கு வியாபாரம் செய்துள்ளாராம். இது சினிமா உலகினருக்கே மிகப்பெரிய ஆச்சர்யமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இது தெரிந்த தனுஷ் தன்னால்தானே இவ்வளவு பெரிய லாபம் அதிகமாகக் கிடைத்துள்ளது என்று நினைத்து சம்பளத்தில் 5 கோடி ரூபாய் அதிகமாகக் கேட்டு தாணுவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளாராம்.