பெண்கள் ஜீன்ஸ் அணிவதை எதிர்ப்பதா?சத்யராஜ் மகள் விமர்சனம்

1581084876 1741
1581084876 1741

சமீபத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கு உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரத் சிங் ராவத் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துத் தெரிவித்தார். இதற்கு சத்தியராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநில்ல முதல்வர் திரத் சிங் ராவத்,ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, நான் விமானத்தில் பயணித்தபோதுஒரு குழந்தையை கையில் வைத்திருந்த பெண், கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருத்தார். இது மோசமான முன்மாதிரி எனத் தெரிவித்தார்.

இதை விமர்சித்து திவ்யா சத்யராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எனது இஸ்ண்டாகிராம் பக்கத்தில் நான் ஷார்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் போட்டு புகைப்படம் பதிவிடுவதை எதிர்த்துப் பலரும் அறிவுரை கூறினர். ஒரு அரசியல்வாதியாக இருந்தால் காட்டன் புடவையில்தான் இருக்க வேண்டுமா? உத்தரகாண்ட் முதல்வரின் பேச்சை ஒரு பெரியாரிஸ்டாக நான் எதிர்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.