அசுரன் படம் மூலமாக கவனம் ஈர்த்த மலையாள நடிகை மஞ்சு வாரியர் மீண்டும் தமிழில் ஒரு படம் நடிக்க உள்ளார்
மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்துவிட்டு திருமணமாகி மிகப்பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந்து இருப்பவர் மஞ்சு வாரியர். அதையடுத்து அவர் தமிழில் அசுரன் படம் மூலமாக அறிமுகமானவர். அந்த படத்தில் அவர் நடித்த பச்சையம்மாள் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது.
இதையடுத்து இப்போது அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் கௌரவ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை கேஜே ஆர் ராஜேஷ் தயாரிக்கிறார்.