ஊமை விழிகள், இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் அருண்பாண்டியன்,
இவரது மகள் பிரபல நடிகை கீர்த்தி பாண்டியன் அருண்பாண்டியன் குறித்து ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், எனது தந்தை அருண்பாண்டியன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு இதய குழாய்களிலும் இரண்டு அடைப்புகள் இருந்தது அது மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் ஒரு இரும்பு மனிதன் எனது சித்தப்பா என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.