சீத் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி.
இதில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இளம் சின்னத்திரை நடிகை ஷபானா.
இந்த செம்பருத்தி தொடர்நாடகம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி,அவர் மனதில் இருந்து நீங்கா இடத்தையும் பிடித்துள்ளார் ஷபானா.
இந்நிலையில் நடிகை ஷபானா, பாக்கியலட்சுமி தொடர்நாடகத்தில் நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் ரசிகர் ஒருவர் ஆர்யனிடம் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதற்கு ஆர்யன் என்பவர் ஷாபனாவை குறிப்பிட்டு ´ நான் இவங்களுக்கு என்ன சொல்லவது ´ என கூறியுள்ளார்.
இதற்கு நடிகை ஷபானா ´என்னுடையது´ என ஆர்யன் கூறியதற்கு பதில் போட்டுள்ளார்
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷபானா இவரை காதலித்து வருகிறார் என உறுதி செய்து சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.
ஆனால் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக ஷபானா தெரிவிக்கவில்லை.