நடிகை நயன்தாராவுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதில் சந்தேகம் எழுந்துள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையினால் பாதிக்கப்படும் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சுகாதாரத்துறையினரால் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார். நேற்று நடிகை நயன்தாரா தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், நடிகை நயன்தாரா தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், தாதியின் கையில் தடுப்பூசி இல்லை என்றும், வெறும் விரல்களால் தடுப்பூசி போடுவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.