கடந்தாண்டு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வசந்த் அண்ட் கோ நிருவனர் ஹெச்.வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து இவரது மகனும் நடிகருமான விஜய் வசந்த் வெற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அப்பாவை இழந்த பின் கடந்து வரும் முதல் பிறந்தநாள். அவர் எப்போதும் வழங்கும் அறிவுரைகளையும் அவரது வாழ்த்துக்களையும் இன்று நினைவுகூர்கிறேன். எப்போதும் நீங்கள் எங்களுடன் வாழ்கிறீர்கள். உங்கள் கனவுகளை நனவாக்க உழைப்பேன் என்று இந்நாளில் உறுதி கொள்கிறேன எனத் தெரிவித்துள்ளார்.