சோனு சூட்டின் தீவிர ரசிகர்கள் இணைந்து சோனுசூட்டின் புகைப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின்போது, புலம்பெயர் மக்கள், தொழிலாலர்கள்,வெளிநாட்டு மாணவர்கள், விவசாயிகள் , ஏழைகள், ஆகியோருக்கு பெரிதும் உதவியர் சோனு சூட்.
இதுமட்டுமின்றி இன்னும் ஏராளமான மக்களுக்கு அவர் உதவி செய்து வருகிறார். தன் அலைப்பேசிக்கு வரும் அழைப்புக்ளுக்கு தவறாமல் பதில் சொல்லி எல்லா உதவிகளும் செய்து ரியல் கதாநாயகனாக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், ஆந்திரபிரதேசத்தில் உள்ள காலஹஸ்தியில் சோனுசூட்டின் புகைப்படத்திற்கு ரசிகர்களி இணைந்து பாலபிஷேகம் செய்துள்ளனர். அவர் இந்தக் காலத்தில் எல்லோருக்கும் முன்னுதாரணமாக உதவி செய்துவருவதை ஒட்டி இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளனர். இது வைரலாகி வருகிறது.
மேலும் இந்த பால் அபிஷேகத்திற்கு நீங்கள் தகுதியுடையவர் என்று ரசிகர்கள் பெருமையுடன் கூறிவருகின்றனர்.