பாகுபலி படத்தின் வெற்றிக்குப்பின் இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமகாகி விட்டார் நடிகர் பிரபாஸ்.
இவர் நடிப்பில் தற்போது ‘சலார்’ திரைப்படம் உருவாகி வருகிறது. கே.ஜி.எப் எனும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இப்படத்தை இயக்கி வருகிறார்.
இதே மகாநடி இயக்குனர் நாக் அஷ்வினுடன் கைகோர்த்து பிரபாஸ் நடித்து வருகிறார். இப்படத்தில் முன்னணி பாலிவுட் நடிகையான தீபிகா படுகோண் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.
இவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதுவாகும். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க, நடிகை தீபிகா படுகோணுக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.