இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துக்காக ஒரு கதை உருவாக்கி அதை அவரிடம் சொல்ல முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய படங்களை இயக்கியவர்
அதன் பின்னர் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார். அதன் பின்னர் இப்போது காதலை தேடி நித்யானந்தா மற்றும் பகீரா ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது அஜித்தை சந்தித்த பின்னர் தனது எண்ண ஓட்டமே மாறிவிட்டதாகக் கூறியுள்ளார். அதன் பிறகு எனது கதை தேர்வு வேறு ஒரு தளத்தில் இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது அஜித்திடம் பேசியபோது ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என அஜித் கூறினாராம். அதனால் இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு கதையை உருவாக்கி அதை அவரிடம் சொல்ல முயற்சி செய்து வருகிறாராம்.