திருப்பதியில் நேற்று தரிசனத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த நடிகை நமீதா தரிசன ஏற்பாடுகள் சரியில்லை என குற்றம் சாட்டி உள்ளார்
நடிகை நமீதா அவ்வப்போது தனது கணவருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த நமிதா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போதுதான் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது என்றும் ஆனால் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை என்றும் கடந்த முறை வந்தபோது சிறப்பாக இருந்தது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்
நமீதா மற்றும் அவரது கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகிய இருவரும் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன