தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
மேலும் அவர் மரணமடைந்த ஒரு நாள் முன்னர் தான் தடுப்பூசி செலுத்தி கொண்டார், இதனால் விவேக் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தான் மரணமடைந்தாரா என வதந்திகள் பரவியது.
இதனிடையே தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் விவேக் மரணமடைந்தார் என விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரை தற்போது விசாரணை செய்ய தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.