‘நானே வருவேன்’ தலைப்பில் மாற்றமில்லை – செல்வராகவன்

samayam tamil
samayam tamil

தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ‘நானே வருவேன்’ படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் செல்வராகவன். மாறன் படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் தான் இயக்கவுள்ள புதிய படம் குறித்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு ‘நானே வருவேன்’ படத்தில் மீண்டும் இணைய உள்ளனர். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் இணைய உள்ளதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் அண்மையில் ‘நானே வருவேன்’ படத்தின் தலைப்பு ‘ராயன்’ என மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனிடையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் தனது செல்பி புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, அதில் ‘நானே வருவேன்’ என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தனுஷ், செல்வராகவன் கூட்டணியின் தலைப்பு மாற்றப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

மாறன் படத்தை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்ட நான்கு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பின் தனுஷ், அனிருத் கூட்டணி இந்த படத்தில் இணைந்து பணிபுரிய உள்ளது குறிப்பிடத்தக்கது.