நடிகை வனிதா தாடி பாலாஜியுடன் வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் சரமாரியாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.
நடிகை வனிதா பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், தன்னுடைய வேலையினை மிகவும் மகிழ்ச்சியாக செய்து வருகின்றார்.
சமீபத்தில் இவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிரபல தொலைக்காட்சியிலிருந்தும் குறித்த நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறினார்.
சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடுடன் இருக்கும் வனிதா, அவ்வப்போது கொள்ளை அழகில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர்.
அவர் வெளியிடும் புகைப்படத்தில் பலர் வாழ்த்து தெரிவித்தாலும், சிலர் சரமாரியான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தற்போதும் வனிதா தாடி பாலாஜியுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இதனை அவதானித்த ரசிகர்கள் தாடி பாலாஜியை மகேஷை ஏமாற்றி வாங்கிய பணம் எங்கே என்றும் வனிதாவை எப்பொழுது கல்யாணம் என்றும் சரமாரியாக பேசி வருகின்றனர்.