யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிய இளம் நடிகை!

samayam tamil 14
samayam tamil 14

நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் வீட்டை விட்டு ஓடி வந்ததாக நிரிஷா பஸ்னெட் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தை சேர்ந்தவர் நிரிஷா பஸ்னெட். தற்போது மும்பையில் தங்கி இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். ஜித்தி தில் மானே நா தொடரில் சித்ரா கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

சித்ரா கதாபாத்திரம் நிஜத்தில் என் குணத்தை குறிக்கும் வகையில் இருக்கிறது. சந்தோஷமாக, இருப்பவர் சித்ரா. நானும் அப்படித்தான். அதனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கவனமெடுக்க வேண்டியது இல்லை. உடையே இல்லாமல் படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது. நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் காத்மாண்டுவில் இருக்கும் என் வீட்டில் இருந்து மும்பைக்கு ஓடி வந்தேன். எனக்கு யாரையும் தெரியாது. கையில் சிறிதளவு இருந்த பணத்துடனும், நிறைய நம்பிக்கையுடனும் வந்தேன்.

என் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை தான் நான் இந்த அளவுக்கு வர காரணம். என் கனவு வேலையை செய்து கொண்டிருக்கிறேன் என்றார். கடந்த ஆண்டு யூன் மாதம் நிரிஷாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். அப்பொழுதும், ஊரடங்கிலும் கடினமாக இருந்ததாக நிரிஷா தெரிவித்துள்ளார்.

மும்பையில் தனக்கு யாரையும் தெரியாது என்றும், தன்னுடன் பணியாற்றுபவர்களை மட்டுமே தெரியும் என்றும் கூறியிருக்கிறார் நிரிஷா.