பாதியில் நிறுத்தப்படும் தமிழ் தொடர்கள்

Zee Tamizh
Zee Tamizh

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ஆகிய இரண்டு தொடர்கள் எதிர்பாராத காரணங்களால் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜி தமிழ் தொலைக்காட்சி தொடர்களுக்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. குறிப்பாக இந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா தொடர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொடர்களில் ஒன்று. இந்தத் தொடருக்கென ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் பக்கங்களை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

அதுபோலவே ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடரும ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இரு தொடர்களும் தவிர்க்க முடியாத காரணங்களால் முடிக்கப்படுவதாக ஜி தமிழ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அன்பான நேயர்களுக்கு வணக்கம், உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி. எதிர்பாராத காரணங்களால் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி மற்றும் சத்யா ஆகிய இரண்டு தொடர்களை வரும் வாரங்களில் இருந்து நிறுத்த உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த இரண்டு தொடர்களின் கடைசி அத்தியாயங்கள் ஒக்டோபர் 24 ஞாயிறு அன்று ஒளிபரப்பப்படும். தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது