பிக்பொஸ் ஆரம்பித்தில் இருந்தே மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தாமரைச்செல்வி. நாடக கலைஞரான இருக்கு விஜய் தொலைக்காட்சி பிக்பொஸ் வாய்ப்பு கொடுத்து பெருமைப்படுத்தியது. அதற்கு ஏற்றார் போல் தாமரையும் வெகு விரைவில் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் கடந்த வந்த பாதையின் சோகக்கதை தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்ட தாமரைச்செல்வி தன மகனுக்காக கதறி அழுது தனது மகன் தங்கள் வீட்டுக்கு வராமல் உறவினர் வீட்டில் இருப்பதாகவும், நேரிலும் சரி, தொலைபேசியிலும் சரி தன்னிடம் பேசுவதில்லை என்றும், அவனைப் பார்த்து 4 மாதங்கள் ஆகிறது என்றும் கூறி கதறி அழுகிறார். இந்த நிகழ்ச்சியில் இதை சொல்லாவிட்டால், அம்மா படும் கஷ்டம் மகனுக்கு தெரியாமலே போய்விடும் என்பதால் தான் இங்கு வந்ததாகவும் கூறினார்.