பிக் பொஸ் நிகழ்ச்சியில் நேற்று குறும்படமே இல்லாமல் பாவனியின் முகத்திரையை கமல் கிழித்து விட்டார்.
பிக்பொஸ் வீட்டில் இந்த வாரம் நடந்த பெரிய சம்பவம் தாமரையின் காய்ன் திருடப்பட்டதுதான்.
தாமரை செல்வி ஆடையை மாற்றிய போது ஸ்ருதி அவரது காய்னை திருடினார். ஸ்ருதி காய்னை திருடுவதற்கு பாவனி உதவி செய்தார். தான் காயினை எடுக்க உதவுமாறு பாவனியிடம் கூறினார் ஸ்ருதி.
இதனைக் கேட்ட பாவனி, தான் அவரை தாமரையை திசை திருப்புவதாக கூறி உடை மாற்றும் அறைக்குள் சென்று ரவலை வைத்து மறைக்க, ஸ்ருதி காயினை எடுத்து சென்றார்.
ஆனால் இது பிரச்சனையான பிறகு, தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என அந்தர்பல்டி அடித்தார் பாவனி. இதனால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளானார் பாவனி.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்டுகளை சந்தித்த கமல் காய்ன் விவகாரம் குறித்து தாமரையிடம் கூறினார்.
தாமரையும் நடந்ததை விளக்கினார். தான் வெளியே வர முடியாத சூழலில் இருந்ததை பயன்டுத்தி காய்னை எடுத்துவிட்டார்கள் கண்ணீர் விட்டார்.
இதனை தொடர்ந்து ஸ்ருதியிடம் என்ன நடந்தது என கேட்டார் கமல். அப்போது பேசிய ஸ்ருதி தான் விளையாட வேண்டும் என்றுதான் இருந்தது. ஆனால் அப்படி ஒரு சூழலில் இருக்கும் போது எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
ஆனால் உள்ளே சென்ற போது இருந்தது நான் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன் என்றார். அதனைக் கேட்ட கமல் அந்த அறையில் கேமரா வைக்காததற்கான காரணம், பிரைவேசி ரூம் என்பதால் தான் என்றார்.
இதனை தொடர்ந்து பாவனியிடம் கேட்டார் கமல், அப்போது தான் எதார்த்தமாக அறைக்குள் சென்றதாகவும் , அவரை மறைக்க வேண்டும் என்றுதான் ரவலை காட்டினேன்.
டவலை வைத்து மறைத்து திசை திருப்பும் எண்ணத்தில் செய்யவில்லை என்றார். இதனைக் கேட்ட கமல் திசை திருப்பும் எண்ணத்தில் மறைக்கவில்லையா என்று திருப்பி திருப்பி கேட்டு உறுதிப்படுத்தினார்.
அதற்கு இல்லவே இல்லை, எந்த பிளானும் இல்லை என அடித்துப் பேசினார் பாவனி. பின்னர் பேசிய கமல் , நீங்கள் திட்டமே போடவில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் வெளியில் திட்டம் போட்டதை நாங்கள் பார்த்தோம்.
உங்களால் பொது வெளியில் ஒத்துக் கொள்ள முடியாத எதையும் செய்யாதீர்கள். ஒத்துக்கொள்ள முடியும் என்றால் செய்யுங்கள் என செம கிழிகிழித்தார்.
பிறகு பெருந்தன்மையான தாமரையை சுருதி மற்றும் பாவனி செய்த செலை மன்னிக்கும் படி கூறினார். அவரும் மன்னித்து விட்டதாக கூறுகின்றார்.
இதேவேளை, பல விவாதங்களுடன் இன்றைய நிகழ்ச்சி சென்றது. மேலும், பிக் பொஸ் தமிழ் சீசன் 5ல் இருந்து இந்த வாரம் யார் வெளியேறினார் என்கிற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. சின்ன பொண்ணு இந்த வாரம் குறைந்த ஓட்டுகளால் வெளியேற்றப்பட்டுள்ளார்.