மிஷ்கின் இயக்கத்தில் எஸ்ஜே.சூர்யா!

fg 5 1
fg 5 1

எஸ்.ஜே.சூர்யா காட்டில் தான் இப்போது அடமழை. மாநாடு படத்தில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பால் படங்கள் குவியத் தொடங்கியுள்ளன. 8 படங்கள் கையில் வைத்துள்ள எஸ்ஜே.சூர்யாவுக்கு முற்பணம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முட்டி மோதுகின்றனர். இதனால் படம் இருக்க வைத்திருந்த திட்டத்தை தள்ளிவைத்து விட்டாராம். அண்ணன் – தங்கை கதை ஒன்றை எழுதி வைத்துவிட்டு தயாரிப்பாளருக்காக காத்திருந்தவர் தற்போது முழுமையாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின், எஸ்ஜே.சூர்யாவுக்கு ஒரு கதை சொல்லி உள்ளார். விரைவில் அறிவிப்பு வரலாம் என்கின்றனர்.