அமிதாப் பச்சனுக்கு ஆறுதல் கூறிய ஐஸ்வர்யா மகள் !

112836262 gettyimages 911320664
112836262 gettyimages 911320664

பாலிவுட் திரையுலகின் உச்சநட்சத்திரமான நடிகர் அமிதாப் பச்சனுக்கு கடந்த 11-ந்திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நடந்த பரிசோதனையில் மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோர் குணமாகி நேற்று முன்தினம் வீடு திரும்பினர். எனினும் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தநிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் முன் பேத்தி ஆராத்யா, தாத்தா அமிதாப் பச்சனை பார்த்து நீங்களும் விரைவில் வீடு திரும்புவீர்கள் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அமிதாப் பச்சன் அவரது வலைதள பக்கத்தில் உருக்கமான தகவலை பதிவிட்டு உள்ளார். அதில் அவர், “சிறியவளும்(பேத்தி), பாகுராணியும்(மருமகள்) அவர்கள் வீடு திரும்பிவிட்டனர். மகிழ்ச்சி. என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறியவள் அன்புடன், ‘அழாதீங்க நீங்களும் விரைவில் வீடு திரும்புவீர்கள்’ என்றாள் என கூறியுள்ளார்.