’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்

1586080295 5671

துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே மேலும் இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் பாராட்டியுள்ள தகவல் தெரியவந்துள்ளது.

இது குறித்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது. “சூப்பர்.. எக்ஸலண்ட்.. ஹா.. ஹா.. ஹா.. வாழ்த்துக்கள். பெரிய ஃபியூச்சர் இருக்கு உங்களுக்கு”. காலையில் இருந்து இது மட்டும் தான் கேட்டுகிட்டு இருக்கு காத்துல. பறந்துட்டு இருக்கேன். அனைவருக்கும் நன்றி” என்று பதிவு செய்துள்ளார்.
இந்த டுவிட்டரில் அவர் ரஜினி பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் அதே நேரத்தில் பாபா முத்திரையை குறிப்பிட்டதால் ரஜினியிடம் இருந்து கிடைத்த பாராட்டு தான் இது என்பது உறுதியாகியுள்ளது