மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நடிகர் கருணாகரன்

201810081144533626 Karunakaran to complaint agains vijay fans in Comissioner SECVPF
201810081144533626 Karunakaran to complaint agains vijay fans in Comissioner SECVPF

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் கருணாகரன்.

தற்போது சிம்பு நடிப்பில் உருவாகும் மாநாடு, சிவகார்த்திகேயனின் அயலான், யோகி பாபுவுடன் பன்னி குட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவரது காலில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் கருணாகரன் கூறுகையில், பீட்சா, சூதுகவ்வும் படங்களில் நடித்த போதே காலில் அடிப்பட்டது. அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஊரடங்கிற்கு முன்பாக நடைபெற்ற மாநாடு பட படப்பிடிப்பில் மீண்டும் காலில் அடிப்பட்டு கடுமையான வலி ஏற்பட்டது.

பின்னர் பரிசோதனை செய்து பார்த்ததில் ஏசிஎல் எனப்படும் மூட்டு கிழிந்தித்திருப்பது கண்டறியப்பட்டு, காலில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இன்னும் இரு வாரங்களில் நலமாகி வீடு திரும்பிவிடுவேன் என கூறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.