90களில் தொகுப்பாளினியாக கலக்கியவர்களில் ஒருவர் ஸ்வர்ணமால்யா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற நிகழ்ச்சி மூலம் இவர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
அதன்பின் அலைபாயுதே, மொழி போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பின் தெக்கத்தி பொண்ணு, தங்கம் போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.
அதன்பின் அவரை சினிமா பக்கம் காணவில்லை, காரணம் சரியான கதாபாத்திரங்கள் எதுவும் வராததால் அவர் அமைதியாக இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக 90களில் கலக்கிய ஸ்வர்ணமால்யா வா இது என அதிர்ச்சியடைந்துள்ளனர்.