கொரோனா காலத்திலும் நேரத்தை வீணடிக்காமல் புதிய விடயங்களில் தனது கவனத்தை செலுத்தி வந்தவர் நடிகை சமந்தா.
செடிகள் நடுவது, சமையல் கற்பது என நிறைய விடயங்கள் செய்து வந்தார், ரசிகர்களுக்கும் அதைப்பற்றி கூறி வந்தார்.
நடுவில் சொந்தமான ஆடை வலைதளம் உருவாக்கினார், பிக்பொஸ் நிகழ்ச்சியில் முதன்முறையாக தொகுப்பாளராக கலக்கினார், உடற்பயிற்சி குறித்து தனி நிகழ்ச்சியாக பேசினார்.
இப்படி பல விடயங்கள் அடுத்தடுத்து செய்துவரும் சமந்தா இப்போது புதியநிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.