தமிழ் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் நடிகை ப்ரியா ஆனந்த் தற்போது பிரபல இணையத்தொடரொன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அந்தவகையில் இவ் இணையத்தொடர் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ப்ரியா ஆனந்த் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் 2000 ரூபா நாணயத் தாள்களால் செய்யப்பட்ட மாலையை அணிந்திருப்பது, அவர் பணமழையில் நனைவது போன்று உள்ளது.
ப்ரியா ஆனந்த்’ நடிப்பில் கடந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜியின் ’எல்கேஜி’ மற்றும் துருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியான நிலையில் இந்த ஆண்டு அவர் கன்னடத்தில் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மூன்றின் படப்பிடிப்புகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.