கொரோனாத் தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, தற்போது வரை தன்னால் இயன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.
குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பேருந்து வசதி செய்து கொடுத்தது, ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து தந்தது, ஏழை மாணவர்களுக்கு தொலைபேசி வாங்கி கொடுத்தது என இவர் செய்த உதவிகள் ஏராளம்.
இந் நிலையில் இவரது மனிதநேயமிக்க சேவைகளை கௌரவப்படுத்தும் விதமாக, ஆந்திராவிலுள்ள சரத்சந்திரா ஐஏஎஸ் அகடமி, சரத்சந்திரா கல்லூரி, ஆகியவற்றில், ஒரு துறைக்கு சோனு சூட்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்காக தான் மிகவும் பெருமைப்படுவதாகவும், இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் சோனு சூட் கூறியுள்ளார்.