தினமும் கருந்துளசியை தவறாமல் எடுத்து வருவதால் கிடைக்கும் பயன்கள்

1612584601 995
1612584601 995

கருந்துளசி காரம் சிறிது இருக்கும் ஆனால் சிறிது மிளகுடன் 10 துளசியிலைகளை பறித்து மென்று விழுங்கினால் தொண்டையில் உள்ள சளி முற்றிலுமாக நீங்கிவிடும்.

இரவில் செம்பு அல்லது பஞ்ச உலோகப்பாத்திரத்தில் 10 துளசி இலைகளை நசுக்கி போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து விடவும். பின் காலையில் வெறும் வயிற்றில் பல்லைக் கொப்பளித்துவிட்டு அந்த தண்ணீரினைப்பருக வேண்டும். உடலில் உள்ள அனைத்து தாதுப்பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். தேகம் மிளிரும். புற்றுநோய்க்கூட உடனே கரைந்து போய்விடும்.

கண்புரை ஏற்பட்டாலும் சரிசெய்துவிடும். கருந்துளசியானது சுற்றுப்புறச்சூழலுக்கு மிகுந்த நண்பனாக இருக்கின்றது. ஒசோன் படலத்தில் உள்ள பாதிப்பை சரிசெய்கின்றது.

தினமும் கருந்துளசியை தவறாமல் எடுத்து வந்தால் 48 நாட்களில் சளி, மற்றும் கபநோய்களிடம் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம்.

கருந்துளசியை சளித் தொல்லைக்கு ஒரு சிறந்த மருந்துச் செடியாக குறிப்பிடலாம். ‘ஆசிமம் டெனியபுளோரம் டைப்பிகா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த செடிகளின், இலைகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.

சிறிது கருந்துளசி இலைகளை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க வேண்டும். இது பாலின் ஒவ்வாமையால் ஏற்படுகின்ற சளியை நீக்குகிறது.

நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க 5 அல்லது 10 கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் நீரில் ஊற த்து, அந்த நீரை அருந்தி பின்னர் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.

தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 3, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.