மாதுளை தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று இந்த தேநீரை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மாதுளை தோல் – 1 பழத்தினுடையது
லெமன் தோல் – 1 பழத்தினுடையது
துருவிய இஞ்சி – 1 தே.க
புதினா இலைகள் – 4-5
தேன் அல்லது சுவைக்கேற்ப மாபிள் சிரப்
செய்முறை
பழத்தின் தோல்களை நன்றாக தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள்.இந்த தோலில் தண்ணீர் ஊற்றி 1-2 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். அதனுடன் இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஜாரை மூடி அடுப்பை அணைத்து விடுங்கள். 15-20 நிமிடங்கள் கழித்து அதை வடிகட்டி குடியுங்கள். இதனுடன் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடியுங்கள்