பாதாம் பிசின் என்பது பாதாம் மரத்திலிருந்து வடிகின்ற பிசின். அந்த பிசின் பலவகையான உடல் பிரச்சனைகளை தீர்க்க வல்லது.
பாதாம் பிசினில் தாதுக்கள் அதிகம் நிரம்பியுள்ளது எனவே அவை உடலின் எலுப்புகள் மற்றும் தோலிற்கு மிகவும் முக்கியமானதாகும். உடல் சூட்டினால் அவதிப்படுவேற்கு இது மருந்தாகும். பாதாம் பிசினை தண்ணீரில் ஊற வைத்து சிறுது நேரம் கழித்து அதை சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் பாதாம் பிசினை கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை அருந்த வேண்டும். உடல் எடை கூட விரும்புவார்கள் கொழுப்பு நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து சாப்பிட வேண்டும்.
பலரும் அதிகமாக கூறும் நெஞ்செரிச்சல் உணவு செரிமான பிரச்சனை(அசிடிட்டி) போன்றவைகளுக்கு பாதாம் பிசினை ஊற வைத்து சாப்பிட்டால் அவை நீங்கும்.
நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலம் தேறி வரும் நபர்கள் மற்றும் தற்போதும் நோயால் அவதிப்பட்டு வரும் நபர்கள் பாதாம் பிசினை நீரில் ஊற வைத்து வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் நோயால் உடல் இழந்த பலத்தை மீண்டும் உடலுக்கு தரும்.
சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சிறுநீர் பாதையில் வளரும் சதைகளை பாதாம் பிசின் கரைக்கும் என்று சித்த மருத்துவத்தில் நம்பப்படுகிறது.
பாதாம் பிசினை பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். வாந்தி, மயக்கம், பித்தம் போன்ற நோய்களை பாதாம் பிசின் தீர்க்கும்.