சளி தொல்லையை விரட்டும் வீட்டு மருத்துவம்

download 14 1
download 14 1

பெரும்பாலோனோருக்கு பருவ நிலை மாற்றங்கள் காரணமாக அடிக்கடி சளி தொல்லை ஏற்படுவது வழக்கம்.

அதுமட்டுமின்றி சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடுகின்றது.

இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட நம்மில் பலர் அடிக்கடி மருத்துவமனைக்கும், மருந்துக்கடைகளுக்கு செல்வதுண்டு.

இதனை தவிர்த்து நாம் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை கொண்டு கூட சளித் தொல்லைக்கு விடுதலை பெற முடியும்.

அந்தவகையில் தற்போது சளித் தொல்லையால் அவதிப்படுபர்களுக்கு சில எளிய வைத்திய முறைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

வெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை.

தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும். தொண்டை உறுத்தலை நீக்கும் சளியையும் குறைக்கும்.

பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும்.

தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.

ஐந்து பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு தே.க நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். இவை சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும்.

ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மிளகுப் பொடியை ஒரு காட்டன் துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல் எல்லாம் பறந்தே போய்விடும்.