இறுதி நேரத்தில் அந்த பாடலை பாடவா என எஸ்.பி.பி கேட்டார் : கண்ணீர் விட்ட பிரபலம்

SPBB
SPBB

பாடகர் எஸ்பிபி தொடர்பான உருக்கமான விடயத்தை பிரபல இசையமைப்பாளர் கோட்டி பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக இருந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 25ஆம் திகதி காலமானார், அவர் உயிரிழந்து சரியாக ஒரு மாதம் ஆகிவிட்டது.

அவரின் மறைவில் இருந்து ரசிகர்கள் மற்றும் திரைதுறையை சார்ந்தவர்கள் இன்னும் மீளவில்லை.

இந்த நிலையில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள கோட்டி, எஸ்.பி.பி தொடர்பில் உருக்கமான விடயத்தை பகிர்ந்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பியின் பாடல்களை பல பாடகர்கள் பாடினர்.

அப்போது பேசிய கோட்டி, இறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் பெரிதும் அவதிப்பட்டுள்ளார்.

பொதுவாகவே உடல்நலம் சரியில்லாத போது தனது புகழ்பெற்ற பாடலான மண்ணில் இந்த காதல் அன்றி பாடலை பாடவா என மருத்துவரிடம் எஸ்.பி.பி கேட்பாராம்.

இதை கேட்ட அங்கிருந்தவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டனர்.