நன்னாரியின் ஆரோக்கிய பலன்கள்

images 23
images 23

கோடையின் வெயில் தாக்கத்தை குறைப்பதற்காக பருகப்படும் இயற்கை பானங்களில் முதல் இடம் பிடிப்பது ‘நன்னாரி சர்பத்’ தான்.

இது கிராமப்புற, நகர்ப்புற மக்களின் கோடைக் காலங்களில் தவிர்க்கமுடியாத பானம் உள்ளது.

அதிலும் நன்னாரியின் வேரை தண்ணீரில் ஊறவைத்துக் குடித்து உடல் உஷ்ணத்தை குறைத்து வந்தனர் முன்னோர்கள் என்று கருதப்படுகின்றது.

உண்மையில் இதன் வேரில் பல்வேறு மருந்து நன்மைகள் நிறைந்துள்ளது. ஒற்றைத்தலைவலி, இரத்தப்பபோக்கு, நாள்பட்ட இருமல், சளி போன்ற பல்வேறு உடல்நல கோளாறுகளை தவிரக்கின்றது.

அந்தவகையில் தற்போது இந்த அற்புத வேரில் அடங்கியுள்ள ஆரோக்கிய பலன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • நன்னாரி சிறுநீர் நன்றாகப் பிரிய வியர்வையைப் பெருக்கி உடலில் உஷ்ணத்தைத் தனித்து உடம்பை உரமாக்கக் கூடிய தன்மை உடையது.
  • ஒற்றை தலைவலி, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நன்னாரி நல்ல மருந்தாகும்.
  • நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும்.
  • நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவதோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.
  • நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.
  • நன்னாரி வேர்ச்சூரணத்தைத் தேனில் குழைத்து உண்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.
  • பச்சை நன்னாரி வேரை நீர் விட்டு அரைத்து பாக்களவு வெந்நீரில் தினம் காலையில் ஒரு வேளை கொடுத்து வர பற்களிலிருந்து வடியும் இரத்தம் நிற்கும்.
  • நன்னாரி வேரை நன்கு சுத்தம் செய்து அரைத்து, பசும்பாலில் அரைத்து, மூன்று தடவை பாலில் கரைத்து வடிகட்டி, தினமும் 3 வேளை 5 நாட்கள் உண்டு வந்தால் உதிரப்போக்கு தீரும்