பெண்களின் இப்படியான நடவடிக்கை ஆண்களை கூலாக்கும்

photo 1525072124541 6237cc05f4f7
photo 1525072124541 6237cc05f4f7

ஆண்கள் எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாகக் கோபப்படுகிறவர்களாக இருந்தாலும் கூட, பெண்களின் சில வேடிக்கையான நடவடிக்கைகள் அவர்களை கூலாக்கும்.

ஆண்களிடம் இருக்கும் ஒரு கெட்டப் பழக்கம் என்னவென்றால், தங்களுக்கு நண்பர்களிடம், அலுவலகம், பொது இடங்கள் என வெளியில் ஏற்படும் கோபத்தை எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு வந்து வீட்டில் இருக்கும் குழந்தைகளிடமோ அல்லது மனைவியிடமோ தான் காட்டுவார்கள்.

அது தவறுதான் என்றாலும் வீட்டில் உள்ள மனைவியின் கணவரின் சூழலைப் புரிந்து கொள்ளாமல் கோபப்பட்டால் என்ன ஆகும்? வீடு தான் ரெண்டாகும். அதனால் கொஞ்சம் பொறுமையாக இருந்து அந்த சூழலை தன்வசப்படுத்தினாலே எளிதில் பிரச்சினையை சரிசெய்துவிட முடியும்.

அறிவாளி புகழ்
பெண்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் எப்படி மகிழ்ச்சி அடைவார்களோ அதேபோல தான் ஆண்களும் தங்களை அழகாக அறிவாக இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டால். பெருமை தாங்காது. அதனால் ஆண்கள் கோபமாக இருப்பது தெரிந்து விட்டால் உடனே இந்த ஆயுதத்தை நீங்கள் கையில் எடுக்கலாம். என் சமத்து, உங்கள மாதிரி வருமா என்று நாலு பிட்டுகளை அள்ளித் தெளியுங்கள். மனுஷன் சரி விடு விடு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று போய்விடுவார்.

பேச்சை குறைக்கலாம்..
ஆண்களை அளவுக்கு அதிகமாக கோபப்படுத்தும் விஷயமே பெண்கள் அளவுக்கு அதிகமாகப் பேசுவது தான். ஆனால் அந்த கோபத்தையும் அதிகமாகப் பேசித்தான் சரி செய்ய பெண்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது தான் இதில் பெரிய காமெடியே. பெண்களுக்கு ஐஸ் வெக்கச் சொல்லித் தரணுமா என்ன? அதெல்லாம் சிறப்பான சம்பவமா செஞ்சு முடிச்சிடுவாங்க.

அந்நியன்
பெண்கள் அடிக்கடி தங்களுக்குள் இருக்கும் சுயரூபத்தை மாற்றி மாற்றி ஆண்களுக்குக் காட்டுவார்கள். அதில் அதிகபட்சமாக காதலையும் அன்பையும் மாறிமாறி காட்டினால் இந்த பிரச்சினையே பெரிதாக இருக்காது. அன்பால் சாதித்துக் கொள்ளும் கலை ஆண்களை விடவும் பெண்களுக்கே அழகாக வரும். திறமை இருக்கும்போது அதை ஏன் பயன்படுத்தாமல் இருக்கணும்.

ஞாபகம்
மறதி ஆண்களின் மிகப்பெரிய பலம், பலவீனம் இரண்டுமே அவர்களுடைய ஞாபக மறதி தான். தாங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களே ஆண்களுக்குப் பெரிதாக நினைவில் இருக்காது. அதுபோன்ற சமயங்களில், தனக்குச் சம்பந்தப்பட்ட இனிமையான தினங்களையும் முக்கிய தினங்களையும் நினைவுபடுத்தினால் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். பெண்களுக்கு இது கைவந்த கலை தான். அதனால் கவலைப்படத் தேவையில்லை.

பட்டால் படட்டும்
ஆண்கள் கோபமாக இருக்கும்போது பிடிக்காத விஷயங்களை விட்டுவிட்டு, நீங்கள் அவர்களிடம் எதையெல்லாம் ரசிப்பீர்களோ அதை உங்கள் முன் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். சில பெண்கள் எந்த முயற்சியும் எடுக்காமல், அவராக கோபம் குறைந்து திரும்பி வரட்டும் என்று விட்டுவிடுவார்கள். இந்த வகையான பொறுமைசாலி பெண்கள் மிக மிகக் குறைவு.