மாதவிடாய் என்பது, ஒரு பெண்ணிற்கு முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் முறையாக வரவேண்டும். அவ்வாறு வராமல் இருக்க பல காரணங்கள் உள்ளது.
வாழ்க்கையில் பல விஷயங்களை பாதிக்கும் முக்கிய காரணி மன அழுத்தம். அதில், ஒன்று மாதவிடாய். சில வேளைகளில் மன அழுத்தம் இருப்பதை வெளிப்படுத்துவதன் விளைவாக உடலின் ஹார்மோனில் சுரப்பு குறைகிறது. இதன் காரணமாக, மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகின்றது.
உடல்நலக் குறைவுதிடீரென ஏற்படும் நோய், குறுகிய கால நோய் அல்லது நீண்ட காலமாக இருக்கும் நோயும் மாதவிடாயை தமதபடுத்தும். இது தற்காலிகமானதுதான்.
குறிப்பாக பகலில் உறங்கிவிட்டு இரவில் விழித்திருக்கும் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் அடிக்கடி தோன்றும். அதேபோல், இரவில் பணிபுரிபவர் பகலில் மாறும்போதும் இந்த பிரச்னை ஏற்படும்.
சில சமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இதுபோன்ற பிரச்னைகளை சாதாரணமாக ஏற்படுத்துகின்றது.அதிக எடைஅளவுக்கு அதிகமாக எடை இருந்தால் ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றி சில சமயம் அவற்றை நிறுத்திவிடும்.
மாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணில் இருந்து மற்ற பெண்ணிற்கு வேறுபடும். சராசரி மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் என்று நினைத்து கொண்டிருக்கும் போது, அது எல்லோருக்கும் பொருந்தாது. சில வேளைகளில் தவறாக கணக்கிடுவதனால், அது காலதாமதமாக வருவதாக நம்புகிறோம்.
ஆகவே ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால், எப்போது கரு முட்டை உற்பத்தியாகும் என்று தெரியும் பட்சத்தில், கருமுட்டை வெளியேறிய இரண்டு வாரங்கள் கழித்து, தங்களுடைய மாதவிடாய் சுழற்சியை கவனியுங்கள்.