சாஸ்திரப்படி சில மிருகங்கள் செல்வத்தின் வருகையை உணர்த்தும் என்று சொல்லப்படுகின்றது.
தற்போது அந்த மிருகங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
நீங்கள் எழும் நேரத்தில் வெள்ளை வாத்துபோன்றவற்றை முதலில் பார்க்க நேர்ந்தால் அன்று உங்கள் வாழ்க்கையில் ஏதோ நல்லது நடக்க போகிறது என்று அர்த்தம்.
வெள்ளை பசு ஒன்று உங்கள் வழியில் குறுக்கிட்டால் கோவப்படாதீர்கள் அது லக்ஷ்மி தேவியின் வருகையாகும்.
உங்கள் கனவில் தங்க நிற அல்லது வெள்ளை பாம்பை பார்க்க நேர்ந்தால் அது செல்வத்தின் தெளிவான அறிகுறியாகும்.
நீங்கள் வெளியே செல்லும்போது உங்கள் பயணத்தில் குரங்கு அல்லது பாம்பை பார்த்தால் நீங்கள் விரைவில் செல்வந்தராக வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.
சீன ஜோதிட சாஸ்திரங்களின் படி வௌவால் செல்வத்தின் அடையாளமாக இருக்கிறது.
உங்கள் வீட்டிற்குள் வௌவால் கூடு கட்டுவது உங்களை நோக்கி செல்வம் வரபோவதற்கான அறிகுறி ஆகும்.
சாஸ்திரங்களின் படி பறவையின் எச்சம் மேலே விழுபவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுவார்கள்.
உங்கள் வீட்டை தேடி நாய்க்குட்டி வந்தால் அது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகும்.இது செல்வம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றின் அறிகுறியாகும்.