பெண்களுக்கு அதிகமாக மாரடைப்பு வருகிறதாம் !காரணம் இதுதான்

05 1515153374 1
05 1515153374 1

நெஞ்சு வலிக்காமலேயே மாரடைப்பு ஏற்பட்டால், அதை ‘சைலன்ட் அட்டாக்‘ என்பர்.

வயது முதிர்ந்தவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நரம்பு கோளாறு உள்ளவர்களுக்கும் இவ்வகை மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

பெண்களுக்கு மாதவிடாய் முழுமையாக நிற்பதற்கு முந்தைய காலகட்டங்களில் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவு.

மாதவிடாய் நின்றவுடன் மாரடைப்புக்கான வாய்ப்பு ஆண்களை விட அதிகம்.

அறிகுறி

மேல்வயிறு, தோள்பட்டை, கழுத்து வலி, சில நேரங்களில் தலை வலி, மயக்கம் போன்றவை கூட இம்மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கும்.

குறிப்பாக திடீரென்று மூச்சு வாங்குதல், வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டால், இது மாரடைப்பா என்பதை இ.சி.ஜி., மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏன் பெண்களுக்கு மாரடைப்பு வருகின்றது?

முறையாக உடற்பயிற்சி செய்வதில்லை.
நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிடுவதனால்.
எளிதில் மன அழுத்தத்திற்கும் உள்ளாகுவதனால்
எனவே பெண்கள் மாரடைப்பில் இருந்து தப்பிக்க சோம்பலான வாழ்வியல் முறையில் இருந்து விடுபடுவது அவசியமானது ஆகும்.