இதனை செய்தால் பிரசவ தழும்புகள் மறையுமா !

blobid1516641794072
blobid1516641794072

பொதுவாக குழந்தை பெற்ற அனைத்து பெண்களும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை பிரசவ கால தழும்புகள்.

இது ஒரு சிலருக்கு இது தானாக மறைந்து விடும். ஆனால் சிலருக்கு இது நிரந்தர தழும்பாக மாறி அசிங்கமாக தென்படும்.

இதனால் அவர்களால் சில ஆடைகளை அணிய முடியாமல் அவதிப்படுவார்கள்.

இத்தகைய பிரச்சனையை, வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே சரி செய்ய முடியும்.

பிரசவ கால தழும்புகளை எளிதில் எப்படி மறைய செய்வது என்பது பார்ப்போம்

கற்றாழையின் ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால், ஸ்ட்ரெட்ச் மார்க்கின் நிறம் மங்கி, சருமம் அழகாகும்.

ஆப்ரிக்காட் பழத்தை வைத்து தழும்பு உள்ள இடத்தில் ஸ்கரப் செய்தால், அது அங்குள்ள சருமத் துளைகளை விரிவடையச் செய்து, அதில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட செல்களை கண்டுபிடித்து, அதன் நிறத்தை மங்க வைத்து, நாளடைவில் படிப்படியாக தழும்புகளை மறைய வைத்துவிடும்.

அவோகேடோ, பாதாம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்தால் நாளடைவில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கிவிடும்.

தழும்புகள் வராமல் தடுப்பதற்கு கொக்கோ பட்டர் சிறந்ததாக இருக்கும். அதிலும் இதனை கர்ப்பமாக இருக்கும் போதே தடவி மசாஜ் செய்து வந்தால், திசுக்கள் பாதிப்படையாமல், தழும்புகள் வராமல் தடுக்கலாம்.